×

தோட்டியோட்டில் தொழிற்சாலைக்குள் புகுந்து ₹1.80 லட்சம் பொருட்கள் திருட்டு

திங்கள்சந்தை, ஜன. 12: தக்கலை அரண்மனைரோடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரது மகன் கிரீஷ்குமார் (54). விவசாயி. தனது தம்பியுடன் தோட்டியோடு மவுனகுருசாமிமடம் அருகில் சொந்தமாக கிரசர் இயந்திரம் வைத்து கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். தற்போது வேலை சரிவர இல்லாததால் அவ்வப்போது வந்து கல் உடைக்கும் தொழில் செய்து வந்தனர். சம்பவத்தன்று மாலை கிரசருக்கு வந்தபோது அங்கு இருந்த 9 மின் மோட்டார்கள், 3 காயில் காப்பர் ஒயர்கள், டிராக்டர் இயந்திரத்தின் கலப்பை, கிரசர் இயந்திரத்தின் ஜாஸ்ஹாக், பிளைவீல் ஆகியவற்றை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவற்றை கண்டு பிடிக்க முடியவில்லை. திருட்டு போன பொருட்களின் மதிப்பு சுமார் ₹1 லட்சத்து 80 ஆயிரம் இருக்கும். இது குறித்து கிரீஷ்குமார் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தோட்டியோட்டில் தொழிற்சாலைக்குள் புகுந்து ₹1.80 லட்சம் பொருட்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Dotiot ,Radakrishnan ,Takkalai ,Kriskumar ,Maunakurusamy ,Dinakaran ,
× RELATED தக்கலை அருகே பைக் விபத்தில் மெக்கானிக் பலி